திருக்குறள்

1006.

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன் றீத லியல்பிலா தான்.

திருக்குறள் 1006

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன் றீத லியல்பிலா தான்.

பொருள்:

தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.

மு.வரததாசனார் உரை:

தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:

தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.